×

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பலி: ஆவடி ஓசிஎப் குடியிருப்பில் பரிதாபம்

சென்னை: ஆவடி, கிரி நகரில் ஓசிஎப் தொழிற்சாலையில் ஊழியர்களின் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அடைப்புகளை நீக்க பட்டாபிராம் பீமாராவ் நகர் 4வது தெருவை சேர்ந்த மோசஸ் (45), ஆவடி பஜார் பகுதியைச் சேர்ந்த சி.தேவன் (50), ஆவடி, பஜார் நகர் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் (50), ஆதம் (53) ஆகிய 4 கூலி தொழிலாளர்கள் சென்றனர். இவர்களில் தேவன், சுமார் 15 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி அடைப்புகளை நீக்கும்போது, விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து தொட்டியின் மேல் நின்றிருந்த மோசஸ், அவரை காப்பாற்ற உள்ளே இறங்கியுள்ளார். இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் இருவரும் தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, தொழிலாளிகள்ஜார்ஜ், ஆதம் ஆகிய இருவரும், உடனே ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் முதலில் தேவனை வெளியே மீட்டனர். பின்னர், ஆவடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மோசஸை மீட்டு, முதலுதவி அளித்து ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மோசஸ் மற்றும் தேவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசஸ்சுக்கு அன்னம்மாள் (33) என்ற மனைவிமற்று 2இரு மகள்கள் உள்ளனர். தேவனுக்கு பிரேமா (44) என்ற மனைவியும் 2மகள், ஒரு மகன் உள்ளார்.

முதல்வர் 2 லட்சம் நிவாரணம்
மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு: ஆவடி கிரி நகர் குடியிருப்பு பகுதியில், சென்னை, ஆவடியைச் சேர்ந்த தேவன் மற்றும் பட்டாபிராமைச் சேர்ந்த மோசஸ் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை செப்டிக் டேங்கை சுத்தம் செய்தபோது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

The post கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பலி: ஆவடி ஓசிஎப் குடியிருப்பில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Avadi OCF ,CHENNAI ,OCF ,Giri Nagar, Avadi ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...